search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூர் பிச்சம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    திருப்பூர் பிச்சம்பாளையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைது செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

    போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் அவர்கள் குமாரசாமிநகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 38), சின்னச்சாமி (50), கோபால் (44), சேகர் (45), சின்னான் (55), பழனிச்சாமி (40), கேத்தம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் (60), பாட்டான் (59) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3,250ஐ பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×