என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல ரவுடி கைது- 25 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்21 Sep 2020 10:41 AM GMT (Updated: 21 Sep 2020 10:41 AM GMT)
குற்றாலத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை:
மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி. இவர்களுக்கு இடையே, தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இருதரப்பிலும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
இந்தநிலையில், காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவரும், ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவருமான வெள்ளைக்காளி என்பவர் மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் அவரை கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை மாநகர் சிறப்பு படை போலீசார், திருச்சி போலீசாருடன் இணைந்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியை தேடி வந்தனர்.
இதற்கிடையே, அவர் குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றாலம் சென்று, வெள்ளைக்காளி உள்பட 4 பேரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் மதுரைக்கு அவர்களை அழைத்து வந்தனர். அப்போது வெள்ளைக்காளி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதைதொடர்ந்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி. இவர்களுக்கு இடையே, தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இருதரப்பிலும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
இந்தநிலையில், காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவரும், ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவருமான வெள்ளைக்காளி என்பவர் மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் அவரை கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை மாநகர் சிறப்பு படை போலீசார், திருச்சி போலீசாருடன் இணைந்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியை தேடி வந்தனர்.
இதற்கிடையே, அவர் குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றாலம் சென்று, வெள்ளைக்காளி உள்பட 4 பேரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் மதுரைக்கு அவர்களை அழைத்து வந்தனர். அப்போது வெள்ளைக்காளி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதைதொடர்ந்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X