என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காடு தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையம் திறப்பு
Byமாலை மலர்20 Sep 2020 2:19 PM GMT (Updated: 20 Sep 2020 2:19 PM GMT)
ஏற்காட்டில் பொதுமக்களின் வசதிக்காக தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையத்தை நீதிபதி சந்திரசூட் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காட்டில் பொதுமக்களின் வசதிக்காக தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்ற இ-சேவை மையத்தை நீதிபதி சந்திரசூட் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையொட்டி ஏற்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மாவட்ட கூடுதல் நீதிபதிகள் ராஜேந்திரன், இளங்கோ மற்றும் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இ-சேவை மையத்தில், வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி, நீதிமன்றத்தின் வழக்கு நிலை அடுத்த வாய்தாவின் தேதி மற்றும் இதர விளக்கங்களை பெறலாம். பத்திர தாள்கள் வாங்க வழிவகை செய்வது, மாவட்ட இலவச சட்ட ஆணையம் மூலம் மக்கள் இலவச சட்ட உதவி பெற்று பயன் பெறலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X