என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2020 1:20 PM GMT (Updated: 20 Sep 2020 1:20 PM GMT)
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டை அடுத்த தச்சூர் பகுதியில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் உள்பட போலீசார் மணல் கடத்தலை தடுக்க ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அஜீத் (வயது 20), ஜெகநாதன் (50) பரசுராமன் வயது (27) வினோத் (25) ஆகியோர் மினி லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் தச்சூர் செய்யாற்று படுகைகளில் இருந்து மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் மினி லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டிச்சென்றதில் அஜீத் மற்றும் பரசுராமனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து மேலும் தப்பி ஓடிய ஜெகநாதன், வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X