search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று: 60 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,206 பேர் குணமடைந்துள்ளனர்.
    தமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 5,206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர். 46,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று 60 பேர் (அரசு மருத்துவமனையில் 38, தனியார் மருத்துவமனையில் 22) உயிரிழந்துள்ளர். மொத்த உயிரிழப்பு 8,811 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 86,073 மாதிரிகளும், 84,338 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 64,74,656 மாதிரிகளும், 62,74,931 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×