search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

    கும்மிடிப்பூண்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், பருத்தி சூதாட்டம் எழுதுபவர்களை பிடிக்க சிறப்பு படை போலீசார் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மேற்கண்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனபால் (வயது 58), கோவிந்தசாமி (60), குண்டுத்துரை(60), விஜயா(55), விஜயகுமார் (36), பாசம்மாள் (55), செல்வி (35) என 4 பெண்கள் உள்பட 7 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×