என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டயபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2020 9:30 AM GMT (Updated: 20 Sep 2020 9:30 AM GMT)
எட்டயபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 லாரிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள வைப்பாற்று படுகையில் மணல் கடத்தல் நடப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வைப்பாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 9 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
போலீசார் விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 31), கோவிந்தராஜ் (27), வேலன் (26), கணேசன் (27), முத்துராஜ் (23), காளிஸ்வரன் (31), மணிகண்டன் (30), பழனி (28), முத்து (24) என்பதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம், 2 லாரிகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மாரிமுத்து, மாடசாமி ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே உள்ள வைப்பாற்று படுகையில் மணல் கடத்தல் நடப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வைப்பாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 9 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
போலீசார் விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 31), கோவிந்தராஜ் (27), வேலன் (26), கணேசன் (27), முத்துராஜ் (23), காளிஸ்வரன் (31), மணிகண்டன் (30), பழனி (28), முத்து (24) என்பதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம், 2 லாரிகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மாரிமுத்து, மாடசாமி ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X