என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுரோட்டில் பெண் வெட்டிக் கொலை- சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்
Byமாலை மலர்20 Sep 2020 7:37 AM GMT (Updated: 20 Sep 2020 7:37 AM GMT)
ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாசம்பிள்ளை. இவரது மனைவி லீலாவதி (வயது 55). இவர், சத்திரப்பட்டியில் உள்ள மருத்துவ துணி ஏற்றுமதி ஆலையில் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்திற்கு சொந்தமான சொத்துகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டதாக தெரிகிறது. அப்போது லீலாவதிக்கும், அவரது உறவினரான வாலிபர் முருகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லீலாவதி வழக்கம் போல் இரவுப்பணிக்கு செல்வதற்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது லீலாவதியை பின் தொடர்ந்து வந்த முருகன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் லீலாவதி அவரை தள்ளி விட்டு சென்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லீலாவதியின் கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது குறித்து கீழராஜகுலராமன் போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X