என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 138 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்20 Sep 2020 2:16 AM GMT (Updated: 20 Sep 2020 2:16 AM GMT)
முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் 1,147 பேரை சோதனை செய்து 138 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வருவாய் துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இந்தக் குழுவினர் பொது இடத்தில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 17 பறக்கும் படை குழுவினர் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 221 கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து 30 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டது. இதுபோல் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் 1,147 பேரை சோதனை செய்து 138 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும் படைகள் மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாராபுரம் நகராட்சி பகுதியில் ரூ.7 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வருவாய் துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இந்தக் குழுவினர் பொது இடத்தில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 17 பறக்கும் படை குழுவினர் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 221 கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து 30 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டது. இதுபோல் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் 1,147 பேரை சோதனை செய்து 138 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும் படைகள் மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாராபுரம் நகராட்சி பகுதியில் ரூ.7 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X