search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 15 பேர் மீது வழக்கு

    நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.7,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 21 இடங்களில் முககவசம் அணியாமல் வந்த 250 பேருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனிடையே பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×