search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    ஆலங்குளம் அருகே ஊத்துமலை பஞ்சாயத்து 5-வது வார்டு பகுதி மக்கள் நேற்று ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஊத்துமலை பஞ்சாயத்து 5-வது வார்டு பகுதி மக்கள் நேற்று ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் சரவணன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் செல்வராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், தங்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து உதவியாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    Next Story
    ×