search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாம் தமிழர் கட்சி
    X
    நாம் தமிழர் கட்சி

    தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வை விலக்கி வைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாசரத் முன்னிலை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை விலக்கி வைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், மாநில பேச்சாளர் கரிகாலன், நகர நிர்வாகி ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×