என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்19 Sep 2020 8:06 AM GMT (Updated: 19 Sep 2020 8:06 AM GMT)
பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள விடதண்டலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அரிசியை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி வைத்து, கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரிசியை கடத்துவதாக பொன்னேரி ஆர்.டி.ஓ. வித்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி தாசில்தார் மணிகண்டன் ஆலோசனையின் பேரில், சம்பவ இடத்திற்கு திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் நட்ராஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அக்கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் 19 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட கும்பல் தப்பி தலைமறைவானது.
பொன்னேரி அருகே உள்ள விடதண்டலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அரிசியை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி வைத்து, கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரிசியை கடத்துவதாக பொன்னேரி ஆர்.டி.ஓ. வித்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி தாசில்தார் மணிகண்டன் ஆலோசனையின் பேரில், சம்பவ இடத்திற்கு திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் நட்ராஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அக்கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் 19 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட கும்பல் தப்பி தலைமறைவானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X