search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தக்கலை அருகே திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே மைலோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்மில்லர் (வயது 42), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும், இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஜாண் மில்லர் தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த சில மாதங்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த ஜாண் மில்லர், திடீரென அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜாண் மில்லர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×