search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை- ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னை கோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய கோரி டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோயம்பேடு உணவு தானிய சந்தை திறக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தை 28-ந் தேதி திறக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் இருந்து தான் சென்னையில் அதிக அளவில் கொரோனா பரவியது என்பதை கருத்தில் கொண்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கோயம்பேடு சந்தை கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், சரக்கு வாகன டிரைவர்கள், உதவியாளர்கள் உள்பட அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதுகுறித்த விவரங்களை பதிவு செய்ய அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட வேண்டும்.

    சந்தை பணியாளர்களுக்கு கொரோனா ஆய்வு செய்வதற்காக கோயம்பேடு சந்தை வளாகத்தில் தற்காலிக கொரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×