search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    விருகம்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 66 பவுன் நகை கொள்ளை

    என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 66 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவிக்கு பிரசவம் என்பதால் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார். மேலும் மனைவியை உடனிருந்து இவரும் கவனித்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை விஜயகுமார் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 66 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

    இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×