search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்காட்டுப்பள்ளி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

    திருக்காட்டுப்பள்ளி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்த நடுபடுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சரிதா (வயது38). இவரது கணவர் சங்கர் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கணவனை பிரிந்து சரிதா தனது குழந்தைகளுடன் நடுப்படுகையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சரிதா வெளிநாடு சென்றுவிட்டு, பின்னர் ஆகஸ்டு மாதம் வீடு திரும்பினார். அப்போது அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை மண்எண்ணெய் ஊற்றி தனது உடலில் தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் இருந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×