search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலத்தில் என்ஜினீயரிடம் மடிக்கணினி திருடியவர் கைது

    சேலத்தில் என்ஜினீயரிடம் மடிக்கணினி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 27). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் பெங்களூரு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு அவருடைய மடிக்கணினி திருட்டு போனது. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மடிக்கணினி திருட்டு தொடர்பாக கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×