என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2020 11:43 AM GMT (Updated: 18 Sep 2020 11:43 AM GMT)
அவினாசி அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
அவினாசியை அடுத்த கணியாம்பூண்டியை சேர்ந்த இளையபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 35). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவுரி (30) என்ற மனைவியும், சுவாதி (9) ஜெகதீஸ்வரன் (5) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். செல்வக்குமார் தனது தாயாரின் மருத்துவச் செலவிற்காகவும், குடும்பச் செலவுக்காகவும் வெளியில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் அவினாசி மங்கலம் ரோட்டில் ஒரு தனியார் காலி இடத்தில் உள்ள வேப்பமரத்தில் செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் அவரது மனைவிக்கு தெரியவந்தது. இது குறித்து கவுரி கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X