search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ மேற்படிப்பு
    X
    மருத்துவ மேற்படிப்பு

    மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவு நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்

    உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
    மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் பல இடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் செப்டம்பர் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்குத் தனியாகக் கலந்தாய்வு நடத்த இயலாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

    இந்நிலையில் கலந்தாய்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×