என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவைகுண்டம் அருகே மேலும் ஒரு பழங்கால சதிக்கல் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்18 Sep 2020 9:43 AM GMT (Updated: 18 Sep 2020 9:43 AM GMT)
ஸ்ரீவைகுண்டம் அருகே மேலும் ஒரு பழங்கால சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல் 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் பல்வேறு தொல்லியல் ஆதாரங்களை கண்டுபிடித்து வருகிறார். கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டம் அணை அருகே குருசுகோவில் வழியாக செல்லும் வாய்க்கால் படித்துறையில் 16 முதல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சதிக்கல்லை கண்டுபிடித்தார். தற்போது அவர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பேட் துரைசாமிபுரம் செல்லும் சாலையில் ஒளிமுத்துசாமி கோவில் அருகே மேலும் ஒரு சதிக்கல்லை கண்டுபிடித்து உள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் மாணிக்கம் கூறுகையில், ‘இந்த சதிக்கல் 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இதில் கணவன், மனைவி என இரு சிலைகள் புடைப்பு சிற்பமாக உள்ளன. பழங்காலத்தில் இந்த சதிக்கல்லுக்கு மடாலயம் கட்டி வழிபட்டு உள்ளனர். 2 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மடாலயத்தின் வாசல் பகுதியில் இருபுறங்களிலும் 3 ஜோடி விளக்கு மாடங்கள் 20 செ.மீ. உயர இடைவெளிகளில் உள்ளன. இந்த சதிக்கல்லானது 58 செ.மீ. நீளமும், 47 செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் கொண்டது. இதில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 2 புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஆண், பெண் இருவரும் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காட்டப்பட்டு உள்ளன. கணவன் இறந்த பிறகு அவரது உடல் எரியும் சதி தீயினுள் பாய்ந்து உயிர் துறந்த மனைவியின் கற்பை போற்றும் வகையில் இந்த சதிக்கல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சதிக்கல்லை தீப்பாய்ந்த அம்மனாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்‘ என்றார்.
இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாற்று ஆசிரியர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் பல்வேறு தொல்லியல் ஆதாரங்களை கண்டுபிடித்து வருகிறார். கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டம் அணை அருகே குருசுகோவில் வழியாக செல்லும் வாய்க்கால் படித்துறையில் 16 முதல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சதிக்கல்லை கண்டுபிடித்தார். தற்போது அவர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பேட் துரைசாமிபுரம் செல்லும் சாலையில் ஒளிமுத்துசாமி கோவில் அருகே மேலும் ஒரு சதிக்கல்லை கண்டுபிடித்து உள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் மாணிக்கம் கூறுகையில், ‘இந்த சதிக்கல் 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இதில் கணவன், மனைவி என இரு சிலைகள் புடைப்பு சிற்பமாக உள்ளன. பழங்காலத்தில் இந்த சதிக்கல்லுக்கு மடாலயம் கட்டி வழிபட்டு உள்ளனர். 2 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மடாலயத்தின் வாசல் பகுதியில் இருபுறங்களிலும் 3 ஜோடி விளக்கு மாடங்கள் 20 செ.மீ. உயர இடைவெளிகளில் உள்ளன. இந்த சதிக்கல்லானது 58 செ.மீ. நீளமும், 47 செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் கொண்டது. இதில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 2 புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஆண், பெண் இருவரும் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காட்டப்பட்டு உள்ளன. கணவன் இறந்த பிறகு அவரது உடல் எரியும் சதி தீயினுள் பாய்ந்து உயிர் துறந்த மனைவியின் கற்பை போற்றும் வகையில் இந்த சதிக்கல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சதிக்கல்லை தீப்பாய்ந்த அம்மனாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்‘ என்றார்.
இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாற்று ஆசிரியர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X