search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அனுப்பர்பாளையம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அனுப்பர்பாளையம்:

    இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.முருகபாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதை ரத்து செய்ய வேண்டும். 

    தமிழகம் முழுவதும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணை தலைவர்கள் அரங்கசாமி, பாலாஜி, அமைப்பு செயலாளர் பூபாலு, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் குமரன், துணை செயலாளர் வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×