search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலாளர் சண்முகம்
    X
    தலைமைச் செயலாளர் சண்முகம்

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகமழை பெய்யும் மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
    Next Story
    ×