search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடசேரி அருகே தொழிலாளி தற்கொலை

    நாகர்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 55), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அய்யப்பனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×