என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி
Byமாலை மலர்17 Sep 2020 8:27 AM GMT (Updated: 17 Sep 2020 8:27 AM GMT)
கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலியான மீனவர் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் பகுதியை சேர்ந்த இனிகோ, ராபர்ட், சந்தியாகு ராயப்பன், மிக்கேல் (வயது 50) ஆகிய 4 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காக நாட்டுப் படகில் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென்று ஒரு ராட்சத அலை தோன்றியது. இதில் மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு தலைக்குப்புற கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.
இதைப்பார்த்த மற்றொரு படகில் வந்த மீனவர்கள் 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மிக்கேல் மயக்க நிலையில் இருந்ததால் லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உள்ளிட்ட காவல்படையினர் வந்து பலியான மிக்கேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் பகுதியை சேர்ந்த இனிகோ, ராபர்ட், சந்தியாகு ராயப்பன், மிக்கேல் (வயது 50) ஆகிய 4 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காக நாட்டுப் படகில் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென்று ஒரு ராட்சத அலை தோன்றியது. இதில் மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு தலைக்குப்புற கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.
இதைப்பார்த்த மற்றொரு படகில் வந்த மீனவர்கள் 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மிக்கேல் மயக்க நிலையில் இருந்ததால் லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உள்ளிட்ட காவல்படையினர் வந்து பலியான மிக்கேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X