என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர் பண்ணை வீதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி(40). இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை லஞ்சஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் வந்தனர்.
வீட்டிற்குள் வந்ததும் உள்புறமாக கதவை பூட்டி செல்போன்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி, அவரது மனைவி, மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கு விபரம், கடந்த சில மாதங்களில் இவரது கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றையும் சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாலசுப்பிரமணி ஆண்டிப்பட்டி, தேவாரம், குச்சனூர், பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணிபுரிந்து தற்போது அய்யம்பாளையத்தில் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
அதன்பேரில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு அதுகுறித்த முழுவிபரங்கள் தெரியவரும் என்றனர். செயல்அலுவலர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்