search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கலவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    கலவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலவை:

    கலவை அருகே உள்ள நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் நேற்று முன் தினம் பள்ளநாகலேரியில் இருந்து மேட்டுநாகலேரிக்கு மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மொபட்டின் மீது மோதியது. இதில் சக்திவேல், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதே கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் (21), பிரபு (21) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தியராஜ், பிரபு ஆகிய 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து கலவை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×