என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலையில் பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று- வங்கி மூடல்
Byமாலை மலர்16 Sep 2020 9:58 AM GMT (Updated: 16 Sep 2020 9:58 AM GMT)
தக்கலையில் பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது.
பத்மநாபபுரம்:
தக்கலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரி 2 வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் ஒரு பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவருடன் வசித்து வந்த வங்கி பெண் அதிகாரிக்கும் சோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது. அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராம லிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் வங்கிக்கு சென்று அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர் மூலம் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினார்கள். அதைத்தொடர்ந்து வங்கி மூடப்பட்டது.
இதனையடுத்து வங்கியில் பெண் அதிகாரியுடன் பணிபுரிந்து வந்த 10 பேருக்கு சளிமாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தக்கலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரி 2 வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் ஒரு பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவருடன் வசித்து வந்த வங்கி பெண் அதிகாரிக்கும் சோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது. அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராம லிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் வங்கிக்கு சென்று அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர் மூலம் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினார்கள். அதைத்தொடர்ந்து வங்கி மூடப்பட்டது.
இதனையடுத்து வங்கியில் பெண் அதிகாரியுடன் பணிபுரிந்து வந்த 10 பேருக்கு சளிமாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X