search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு

    திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டகரையில் உள்ள நேதாஜிநகர் 2-வது தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் மாடியில் குடும்பத்தோடு வசித்து வருபவர் அன்சாரி(வயது 58). பெயிண்டர். இவர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். பின்னர், அவரது மனைவி சாபிராபீ (52) என்பவர் வீட்டை வெளிபுறமாக தாழ்பாள் போட்டு விட்டு அருகே உள்ள ரேசன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு வந்த சாபிராபீ பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாழ்பாளை திறந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த சாவியை போட்டு பீரோவை திறந்து அதிலிருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.1200-ஐ அள்ளிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×