என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு
Byமாலை மலர்15 Sep 2020 1:02 PM GMT (Updated: 15 Sep 2020 1:02 PM GMT)
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டகரையில் உள்ள நேதாஜிநகர் 2-வது தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் மாடியில் குடும்பத்தோடு வசித்து வருபவர் அன்சாரி(வயது 58). பெயிண்டர். இவர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். பின்னர், அவரது மனைவி சாபிராபீ (52) என்பவர் வீட்டை வெளிபுறமாக தாழ்பாள் போட்டு விட்டு அருகே உள்ள ரேசன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்த சாபிராபீ பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாழ்பாளை திறந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த சாவியை போட்டு பீரோவை திறந்து அதிலிருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.1200-ஐ அள்ளிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X