என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகவேடு அருகே விபத்தில் மின்வாரிய பணியாளர் பலி
Byமாலை மலர்15 Sep 2020 12:16 PM GMT (Updated: 15 Sep 2020 12:16 PM GMT)
நாகவேடு அருகே விபத்தில் மின்வாரிய பணியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 45). இவர், காட்பாடி தாராபடவேடு மின்வாரிய அலுவலகத்தில் மின் அளவீட்டு பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
நாகவேடு அருகே காட்டுமரம் பஸ் நிறுத்தம் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்த தணிகாசலத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து தணிகாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X