என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கால் வேலை இழந்த பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்15 Sep 2020 9:41 AM GMT (Updated: 15 Sep 2020 9:41 AM GMT)
ஊரடங்கால் வேலை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈத்தாமொழி:
ஈத்தாமொழி அடுத்த புதூர் ஊத்தங்கரையை சேர்ந்தவர் செல்வன்(வயது 59), பெயிண்டர். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மேலும், செல்வனுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வனுக்கு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வருமானம் இல்லாதால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்த செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் செல்வன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்ற இளைய மகள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது செல்வன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தனர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்வனின் மனைவி செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கால் வேலை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈத்தாமொழி அடுத்த புதூர் ஊத்தங்கரையை சேர்ந்தவர் செல்வன்(வயது 59), பெயிண்டர். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மேலும், செல்வனுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வனுக்கு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வருமானம் இல்லாதால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்த செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் செல்வன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்ற இளைய மகள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது செல்வன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தனர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்வனின் மனைவி செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கால் வேலை இழந்ததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X