search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரளம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த 2 பேர் கைது

    பேரளம் அருகே பெண்ணிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    பேரளம் அருகே உள்ள வள்ளங்கிலி பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி(வயது38). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று எதிர் வீட்டை சேர்ந்த சிங்காரவடிவேலன்(24), பாலமுருகன்(26) ஆகியோர் துர்காதேவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது மகன் மதனையும் தாக்கினர். இதில் காயமடைந்த துர்காதேவி, மதன் ஆகிய 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இது குறித்து துர்காதேவி பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவடிவேலன், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் சிங்காரவடிவேலனின் தாயார் சத்யபாமா கொடுத்த புகாரின் பேரில் துர்காதேவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×