என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி வழக்கில் 7 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2020 10:12 AM GMT (Updated: 14 Sep 2020 10:12 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்ட மோசடி வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கியதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் முறைகேடாக பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 7.50 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட போலி பயனாளர்களிடமிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வெங்கடேன், பழனிகுமார், புஷ்பராஜ், பாரி, பாலகிருஷ்ணன்,மாயவன், பிரகாஷ் ஆகிய 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X