என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதலுக்கு இடையூறாக இருந்த பெண் கழுத்தை நெறித்து கொலை- சிறுவன் கைது
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காட்டைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிலேயே சுந்தரி வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி வீட்டில் சுந்தரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுந்தரியுடன் தங்கி இருந்த 16 வயது சிறுமியை போலீசார் விசாரித்ததில் தங்களது காதலுக்கு இடையூறாக இருந்ததால் தானும், காதலனும் சேர்ந்து சுந்தரியை கொலை செய்தோம் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த சிறுமியை போலீசார் கைது செய்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் தாண்டிக்குடி அருகே அவனை கைது செய்தனர். போலீசாரிடம் அவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் திண்டுக்கல்லில் வசித்து வருகிறேன். எனக்கும் பண்ணைக்காட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. நான் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி வந்து செல்வேன். இதனை சுந்தரி கண்டித்தார். சம்பவத்தன்று நானும் எனது காதலியும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டு இருந்தோம்.
இதை பார்த்ததும் என்னை கடுமையாக திட்டி சுந்தரி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். இந்த ஆத்திரத்தில் நானும் என் காதலியும் சேர்ந்து அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என்றார். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்