search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

    தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கடலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி பிரேமா (வயது27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முத்துராஜ் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் பிரேமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. பிரேமாவை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக பிரேமா பணம் தர மறுத்துள்ளார். பணம் தராவிட்டால் தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக அவர் மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்துபோன பிரேமா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

    Next Story
    ×