search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வால்பாறை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    வால்பாறை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வால்பாறை:

    வால்பாறை அருகில் உள்ள வில்லோணி எஸ்டேட் மேல்பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக வலிப்புநோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை போலீசார் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×