search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஏரல் அருகே பெண் கற்பழித்து கொலை- நிர்வாண நிலையில் உடல் வீச்சு

    ஏரல் அருகே பெண் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை அடுத்த சம்படி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செங்கமலம் (வயது 47). இவர்களுக்கு 13 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். இதன் காரணமாக செங்கமலம் மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அவரது 2 மகள்களும் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். செங்கமலம் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு தனது மகனுடன் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை செங்கமலம் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சம்படி பகுதியில் உள்ள வயல் காட்டில் உள்ள புதர்பகுதியில் செங்கமலம் அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை, உடலில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது.

    இது குறித்து அப்பகுதியினர் ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று செங்கமலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த செங்கமலத்தை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து அவரது உடலை இழுத்து வந்து வயல்வெளியில் உள்ள புதர் பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

    அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த நபர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கமலம் அரை நிர்வாண நிலையில் கிடந்ததால் அவர் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×