என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி- அரசாணை வெளியீடு
Byமாலை மலர்12 Sep 2020 2:23 AM GMT (Updated: 12 Sep 2020 2:23 AM GMT)
அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களே உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதலாக இடங்களை ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-
கல்லூரிக்கல்வி இயக்குனர், அரசு கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள காரணத்தால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லூரிக்கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, 2020-2021-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும் எனவும் அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களே உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதலாக இடங்களை ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-
கல்லூரிக்கல்வி இயக்குனர், அரசு கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள காரணத்தால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லூரிக்கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, 2020-2021-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும் எனவும் அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X