search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேர் கைது

    ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று மேல்சீசமங்கலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வரசு (வயது 35), விஜய் (25), சிரஞ்சீவி (27), வள்ளிக்கண்ணன் (36) ஆகிய 4 பேர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் வந்த ஏழுமலை மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 5 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஏழுமலையை தேடி வருகின்றனர்.

    மேலும் லாடவரம் மயானப்பகுதி அருகே மாமண்டூரை சேர்ந்த வெங்கடேசன் (50), லாடப்பாடியை சேர்ந்த ரவிசங்கர் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×