search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நேற்று திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்பட அனைத்து சிறை கைதிகளை, பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நேற்று திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஹபீப் ரஹ்மான் தலைமை தாங்கினார். செயலாளர் முகம்மது ரபீக் வரவேற்று பேசினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஜெய்னுலாப்தீன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.

    அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் மஜீத், ஐக்கிய ஜமாத் தலைவர் ஜக்கரிய்யா மற்றும் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு, அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகம்மது யாசர், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் பஷீர் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    Next Story
    ×