என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்9 Sep 2020 11:00 AM GMT (Updated: 9 Sep 2020 11:00 AM GMT)
கரூரில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர் சின்னாண்டாங்கோவில் மேட்டுத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் இருந்து பாரி நகர், பஸ் நிலையம் செல்ல மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த சாலை வழியாக பாரி நகர், மகாத்மா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமராவதி ஆற்றில் ரூ.78 லட்சம் மதிப்பில் கிணறு மற்றும் குழாய் அமைத்து குடிநீர் எடுத்துச் செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது சாலையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கீழே இறங்கி பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்ய ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி சார்பில் நேற்று 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலையை சீரமைத்தால்தான் பள்ளம் தோண்ட அனுமதிப்போம் எனக் கூறி பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X