search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    தமிழக சட்டசபையை குறைந்தது 7 நாட்கள் நடத்த வேண்டும் - துரைமுருகன்

    தமிழக சட்டசபையை குறைந்தது 7 நாட்களாக நடத்த வேண்டும் என தி.மு.க. சட்டசபை துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையை குறைந்தது 7 நாட்களாக நடத்த வேண்டும் என தி.மு.க. சட்டசபை துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவ்த்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில அரசை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது.

    இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×