என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவிகிதம் பேர் முக கவசம் அணியவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
Byமாலை மலர்7 Sep 2020 12:58 PM GMT (Updated: 7 Sep 2020 12:58 PM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் 40% பேர் முக கவசம் அணியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் 12 புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு தான் வரும் வழியில் 40% மக்கள் முக கவசம் அணியவில்லை என்பதை பார்த்ததாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும், விவசாயிகளை உள்ளடக்கிய குடிமராத்து பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X