என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கல்வி கொள்கையை கைவிட வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Sep 2020 11:02 AM GMT (Updated: 7 Sep 2020 11:02 AM GMT)
புதிய கல்வி கொள்கையை கைவிட வலியுறுத்தி திருவாரூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர்கள் ஜாஹிர் உசேன், ஜோசப், மாவட்ட இணை செயலாளர் நூர்முகமது, மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, அனிபா, சலாவுதீன், ரசியாபாணு, இப்ராஹிம் சேட், மாவட்ட பொருளாளர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதசார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி மீது நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்தில் 75 லட்சம் மக்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு நீதி கேட்டும், சிறுபான்மை மக்களின் கல்வி வாய்ப்பினை பறிக்கும் புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். தண்டனை காலம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X