என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2020 10:50 AM GMT (Updated: 7 Sep 2020 10:50 AM GMT)
நாமக்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
தஞ்சாவூரில் இருந்து லாரியில் நாமக்கல்லுக்கு ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக மாவட்ட கலெக்டர் மெகராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பரந்தாமன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று நாமக்கல் அருகே உள்ள கணவாய்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி அளவில் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. அதில் 3 டன் ரேஷன் அரிசி முழுமையாகவும், 17 டன் உடைக்கப்பட்டதாகவும் இருந்தன. இதையடுத்து 20 டன் ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் வைக்கப்பட்டது.
மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராஜப்பா (வயது 35) என்பவரை அதிகாரிகள், நாமக்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன்அரிசி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை தஞ்சாவூரில் இருந்து ஏற்றிவிட்ட விஜி (42) என்பவரையும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரில் இருந்து லாரியில் நாமக்கல்லுக்கு ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக மாவட்ட கலெக்டர் மெகராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பரந்தாமன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று நாமக்கல் அருகே உள்ள கணவாய்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி அளவில் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. அதில் 3 டன் ரேஷன் அரிசி முழுமையாகவும், 17 டன் உடைக்கப்பட்டதாகவும் இருந்தன. இதையடுத்து 20 டன் ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் வைக்கப்பட்டது.
மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராஜப்பா (வயது 35) என்பவரை அதிகாரிகள், நாமக்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன்அரிசி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை தஞ்சாவூரில் இருந்து ஏற்றிவிட்ட விஜி (42) என்பவரையும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X