என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2020 9:19 AM GMT (Updated: 7 Sep 2020 9:19 AM GMT)
கொலை வழக்கில் வெளியே வந்த 4 பேர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் கான்வென்டில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி பேச்சிமுத்து என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த வள்ளிநாயகம்(வயது 30), சுடலைமணி(29), வெள்ளபாண்டி(30), சுடலைகண்ணு(30) ஆகிய 4 பேரை மத்திய போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 4 பேரும் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இவர்களில் வள்ளிநாயகத்தின் மீது 16 வழக்குகளும், சுடலைமணி மீது 2 வழக்குகளும், வெள்ளபாண்டி மீது ஒரு வழக்கும், சுடலைகண்ணு மீது 2 வழக்கும் உள்ளன.
4 பேரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்ததால் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகரில் கடந்த 2019-ம் ஆண்டு 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X