search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ
    X
    சிபிஎஸ்இ

    10, 12ம் வகுப்புக்கான மறுதேர்வு 22ந்தேதி தொடங்குகிறது- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

    தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்து இருக்கிறது.

    அதன்படி, 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு 22-ந்தேதி ஆரம்பித்து, 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த 2 தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×