என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி சட்டசபை தேர்தலில் தெரியும்- அண்ணாமலை பேட்டி
கரூர்:
பா.ஜ.க. மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, அப்பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த தொட்டம்பட்டி கிராமத்திற்கு வந்தார்.
அவருக்கு கரூர் மாவட்ட எல்லையான வைரமடையில் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் பா.ஜ.க. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் அதிகமானோரை பா.ஜ.க.வில் இணைத்து வருகின்றனர்.
பா.ஜ.க. வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாத வளர்ச்சியாக போய் கொண்டிருக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் அது தெரியும். கரூர் மாவட்டத்தில் நிச்சயமாக 2, 3 தொகுதிகளை ஜெயிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. இங்கு இருக்கின்ற எழுச்சியை அப்படியே தேர்தல் களத்தில் இறக்கினால் போதும், பொறுப்பாளர்கள் வேலை செய்தால் போதும். பிரதமர் செய்யக்கூடிய திட்டங்கள் கடை கோடி தமிழர்களுக்கும் தெரிய வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்