என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது
Byமாலை மலர்3 Sep 2020 10:52 PM GMT (Updated: 3 Sep 2020 10:52 PM GMT)
‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது.
சென்னை:
‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’ மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்து இருக்கிறது. இதில் தற்போது முதல்கட்டமாக 300 ஊசி மருந்துகள் இன்று(நேற்று) சென்னை வந்துள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும் தலா 150 பேர் வீதம் 300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
இந்த தடுப்பூசி ஒருவருக்கு 2 முறை செலுத்தப்பட உள்ளது. முதல்முறை தடுப்பூசி போட்டபிறகு 4 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசியை போடுவதற்காக ஆரோக்கியம் உள்ள 150 பேரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’ மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்து இருக்கிறது. இதில் தற்போது முதல்கட்டமாக 300 ஊசி மருந்துகள் இன்று(நேற்று) சென்னை வந்துள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும் தலா 150 பேர் வீதம் 300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
இந்த தடுப்பூசி ஒருவருக்கு 2 முறை செலுத்தப்பட உள்ளது. முதல்முறை தடுப்பூசி போட்டபிறகு 4 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசியை போடுவதற்காக ஆரோக்கியம் உள்ள 150 பேரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X