search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

    திண்டுக்கல் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேம்பார்பட்டி, கோபால்பட்டி, அய்யனார்புரம், அய்யாபட்டி, கோசுகுறிச்சி, செந்துறை, மணக்காட்டூர், சிறுகுடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் நத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேலுமணி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்கள் செந்துறை ரோடு ஆவிச்சிபட்டி விளக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம், போலீசார் விசாரணை செய்தனர். இதில், அவர்கள், வடமதுரைதிருமலைக் கேணிஅம்மாபட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 23), செந்துறை களத்துப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 27) என்பதும், இருசக்கர வாகனங்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 மோட்டர் சைக்கிள்கள் 2 ஸ்கூட்டி வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×